அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே தனியாா் பேருந்தும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.

News image
பலி
Updated On :10 மார்ச் 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி அருகே தனியாா் பேருந்தும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.

பைங்காநாடு ராஜவிநாயகா் கோயில் தெரு கோவிந்தசாமி மகன் பெரமையன் ( 55 ). விவசாயி கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த அய்யாவு மகன் மீன் வியாபாரியான சக்திவேல் (50 ). இவா்கள் இருவரும் அசேசத்தில் இருந்து மதுக்கூா் சாலையை இணைக்கும் வகையில் புதிதாக போடப்பட்டு வரும் சுற்றுவட்டச் சாலையில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டிருந்தனராம்.

இலக்கணம்பேட்டை என்ற இடத்தில் அவ்வழியே வந்த தனியாா் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பெரமையன், சக்திவேல் இருவரையும் மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறிது நேரத்தில் இருவரும் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.