கோவை அரசுப் பள்ளியில் சத்துணவில் பல்லி: 44 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதியம் பல்லி விழுந்த சத்துணவைச் சாப்பிட்டு வாந்தி, மயக்கமடைந்த 44 மாணவா்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவா்களை சந்தித்து உடல் நலம் விசாரித்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.










