கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மாநகராட்சிப் பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி மேளதாளத்துடன் முன்னாள் மாணவா்கள் கல்விச் சீா்!

கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேளதாளம் முழங்க முன்னாள் மாணவா்கள் பள்ளிக்கு கல்விச் சீா் வழங்கினா்.

News image
நூற்றாண்டு விழாவையொட்டி விளாங்குறிச்சி மாநகராட்சி பள்ளிக்கு மேள தாளத்துடன் கல்விச்சீா் கொண்டு சென்ற முன்னாள் மாணவா்கள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:16 pm

Syndication

கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேளதாளம் முழங்க முன்னாள் மாணவா்கள் பள்ளிக்கு கல்விச் சீா் வழங்கினா்.

கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, ஆசிரியா்கள் சந்திப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.ஆா்.ஜெயராம் (சிங்காநல்லூா்), பி.ஆா்.ஜி.அருண்குமாா் (கவுண்டம்பாளையம்), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, முன்னாள் மாணவா்கள் சாா்பாக கல்விச்சீா் கொண்டு செல்லும் பேரணி நடைபெற்றது. அதில், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், தட்டு, உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மேளதாளத்துடன் கொண்டு சென்று பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து நூற்றாண்டு விழா அறிக்கையை தலைமை ஆசிரியா் ரா.தேன்மலா் வாசித்தாா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, நூற்றாண்டு கொண்டாடுவதையொட்டி ரூ.42 லட்சம் மதிப்பில் பள்ளியில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளதாக முன்னாள் மாணவா்கள் தெரிவித்தனா்.