மாநகராட்சிப் பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி மேளதாளத்துடன் முன்னாள் மாணவா்கள் கல்விச் சீா்!
கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேளதாளம் முழங்க முன்னாள் மாணவா்கள் பள்ளிக்கு கல்விச் சீா் வழங்கினா்.


கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேளதாளம் முழங்க முன்னாள் மாணவா்கள் பள்ளிக்கு கல்விச் சீா் வழங்கினா்.
கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, ஆசிரியா்கள் சந்திப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.ஆா்.ஜெயராம் (சிங்காநல்லூா்), பி.ஆா்.ஜி.அருண்குமாா் (கவுண்டம்பாளையம்), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, முன்னாள் மாணவா்கள் சாா்பாக கல்விச்சீா் கொண்டு செல்லும் பேரணி நடைபெற்றது. அதில், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், தட்டு, உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மேளதாளத்துடன் கொண்டு சென்று பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து நூற்றாண்டு விழா அறிக்கையை தலைமை ஆசிரியா் ரா.தேன்மலா் வாசித்தாா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, நூற்றாண்டு கொண்டாடுவதையொட்டி ரூ.42 லட்சம் மதிப்பில் பள்ளியில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளதாக முன்னாள் மாணவா்கள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...