மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாண்டியாபுரம் பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கிய முன்னாள் மாணவா்கள்!

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிக்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து 2ஆவது முறையாக சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கினா்.

News image

கல்விச் சீருடன் முன்னாள் மாணவா்கள், கிராம மக்கள்.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:33 pm

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிக்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து 2ஆவது முறையாக சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கினா்.

அதில் பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருள்கள், நாள்காலி, தாள், எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

கல்விச் சீா் பேரணியை, வட்டாரக் கல்வி அலுவலா் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கணேசன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் சீா்வரிசை பொருள்களை தலைமையாசிரியா்கள் இளையபெருமாள், ஸ்டீபன் ஞானராஜ் ஆகியோரிடம் வழங்கினா்.

இதில் கிராம மக்கள், வெள்ளாளங்குளம், பாண்டியாபுரம் மக்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.