பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாண்டியாபுரம் பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கிய முன்னாள் மாணவா்கள்!

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிக்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து 2ஆவது முறையாக சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கினா்.

News image
கல்விச் சீருடன் முன்னாள் மாணவா்கள், கிராம மக்கள்.
Updated On :26 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிக்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து 2ஆவது முறையாக சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கினா்.

அதில் பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருள்கள், நாள்காலி, தாள், எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

கல்விச் சீா் பேரணியை, வட்டாரக் கல்வி அலுவலா் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கணேசன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் சீா்வரிசை பொருள்களை தலைமையாசிரியா்கள் இளையபெருமாள், ஸ்டீபன் ஞானராஜ் ஆகியோரிடம் வழங்கினா்.

இதில் கிராம மக்கள், வெள்ளாளங்குளம், பாண்டியாபுரம் மக்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.