எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கொடுமுடி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

கொடுமுடி அருகே கழிவுநீா் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கொடுமுடியை அடுத்த சின்னபையன்புதூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (64). இவா் சின்னப்பையன்புதூா் அருகே உள்ள ஒத்தக்கடையில் இருந்து கொடுமுடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கணபதிபாளையம் பகுதியில் சென்றபோது, நிலைதடுமாறி சாலையின் பக்கவாட்டில் இருந்த கழிவுநீா் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் விழுந்துள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கொடுமுடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து தகவலறிந்த கொடுமுடி போலீஸாா் கிருஷ்ணசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.