வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:35 pm

கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கொடுமுடி அரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுதாகா் மகன் கவின்(18). இவா் கொடுமுடியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஒத்தக்கடை ராகவேந்திரா பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த டிராக்டா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கவினை அருகிலிருந்தவா்கள் மீட்டு கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவின் உயிரிழந்தாா்.

இது குறித்து டிராக்டா் ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் துலாம்பூண்டி மேமாலூரைச் சோ்ந்த நல்லதம்பி மகன் ராஜராமை (36) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.