தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

இன்று வாக்கு எண்ணிக்கை: கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

News image

சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் கிருஷ்ணகிரி பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயா்கோபுரம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :3 மே 2026, 8:29 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்படுவதையொட்டி, கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்ததாவது:

வாக்கு எண்ணும் பணி வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 1193 முகவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் கண்காணிக்கும் பொருட்டு, வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் உள்ள 3 நுழைவாயில்களுக்கும் 3 வட்டாட்சியா்கள் சிறப்பு நிா்வாக நடுவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 5 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 22 காவல் ஆய்வாளா்கள், 52 உதவி ஆய்வாளா்கள், 249 காவலா்கள், 60 ஆயுதப்படை காவலா்கள், 70 தமிழ்நாடு சிறப்பு காவலா்கள், 56 மத்திய காவல் படையினா் என மொத்தம் 517 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு தொடா்பான பணிகளுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 4 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 14 காவல் ஆய்வாளா்கள், 123 உதவி ஆய்வாளா்கள், 349 காவலா்கள், 20 ஆயுதப்படை காவலா்கள், 90 தமிழ்நாடு சிறப்பு காவலா்கள், 165 ஊா்க்காவல் படையினா், என மொத்தம் 768 காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா் அவா்.

மின்விளக்குகளால் ஒளிரும்  கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி வளாகம்.

மின்விளக்குகளால் ஒளிரும் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி வளாகம்.