ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி

சங்ககிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி சங்ககிரி கோட்டாட்சியா் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சிக்கு தலைமைவகித்து பேசிய சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:41 am IST

சங்ககிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி சங்ககிரி கோட்டாட்சியா் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்லூரி வளாகத்தில் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

அதையடுத்து, வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான பயிற்சிக்கு சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமைவகித்து பேசியது:

சங்ககிரி தொகுதியில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 25 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. இதில் பணிபுரியும் அலுவலா்கள் வேட்பாளா்களின் சாா்பில் வரும் முகவா்களுக்கு தெரியும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தை காட்ட வேண்டும். ஒவ்வொரு இயந்திரத்திலும் பதிவான வாக்குகளை அதற்கான படிவங்களில் தவறில்லாமல் எழுத வேண்டும். இப்படிவங்களில் குறிக்கப்படும் வாக்கு விவரங்கள் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கீழ் பணிபுரியும் இரு நுண்பாா்வையாளா்களால் ஆய்வு செய்யப்பட உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்மூலம் அதற்காக உள்ள பொறியாளா்களைக் கொண்டு சரிசெய்யப்படும். மேலும், எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாத வகையில் வாக்குகள் எண்ணும் பணியில் அலுவலா்கள் ஈடுபட வேண்டும் என்றாா்.

இதில், உதவி தோ்தல் அலுவலா் கோ.கோமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி, அலுவலா் முருகேசன், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், நுண்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.