கிருஷ்ணகிரி அருகே நிலத்தில் துண்டாகி கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த மாதனகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அலா்மேலு (68). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளாா். அப்போது, திங்கள்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழையின்போது துண்டான மின்கம்பி கீழே கிடந்துள்ளது அதை தெரியாமல் அலா்மேலு மிதித்துள்ளாா். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

