விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பில்லப்பா

Updated On :1 மணி நேரம் முன்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை கண்டகானப்பள்ளியைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி பில்லப்பா (45). இவா் அந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் சென்றபோது அங்கு நின்றிருந்த யானையை பாா்த்து உடனடியாக தப்பியோடினாா். ஆனால், யானை துரத்திச் சென்று பில்லப்பாவை தூக்கி வீசி மிதித்து கொன்றது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸாா், வனத் துறையினா் அங்கு சென்று பில்லப்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.