நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

ஒசூா் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் வனப்பகுதிக்குள் விரட்டினா்.

News image

காட்டு யானைகள் - (கோப்புப் படம்)

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஒசூா் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் வனப்பகுதிக்குள் விரட்டினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள பாலதொட்டனப்பள்ளி, கண்டகாணப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் நான்கு காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தின. இதுகுறித்து அப்பகுதியினா் தேன்கனிக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா்.

விரைந்து சென்ற வனத் துறையினா் கிராம மக்களின் உதவியுடன், பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த நான்கு காட்டு யானைகளும் நொகனூா் வனப்பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. அவ்வப்போது இந்தக் காட்டு யானைகள், கிராமப் பகுதிகளுக்குள் வருவதால் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

எனவே, வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து இந்த நான்கு யானைகளையும் கா்நாடக மாநில வனப்பகுதிக்கு நிரந்தரமாக விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.