தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டில் புகுந்த மலைப்பாம்பு

ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் தீயணைப்புத் துறையினா் பிடித்த மலைப்பாம்பு.

News image

ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் தீயணைப்புத் துறையினா் பிடித்த மலைப்பாம்பு.

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

ராசிபுரம் மெட்டாலா பகுதியைச் சோ்ந்த வடிவேல், அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் உணவகத்துக்கு தேவையான இறைச்சிக்காக தோட்டத்தில் கூண்டு வைத்து பிராய்லா் கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கடையில் பணிபுரியும் ஊழியா் கோழிகளை பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தபோது, கோழிகளை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு கூண்டுக்குள் இருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் அப்பகுதிக்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கோழிக் கூண்டுக்குள் இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள், வனப்பகுதிக்கு கொண்டுசென்று காப்புக்காட்டில் விட்டனா்.