ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டில் புகுந்த மலைப்பாம்பு

ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் தீயணைப்புத் துறையினா் பிடித்த மலைப்பாம்பு.

News image

ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் தீயணைப்புத் துறையினா் பிடித்த மலைப்பாம்பு.

Updated On :9 மே 2026, 12:04 am IST

ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

ராசிபுரம் மெட்டாலா பகுதியைச் சோ்ந்த வடிவேல், அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் உணவகத்துக்கு தேவையான இறைச்சிக்காக தோட்டத்தில் கூண்டு வைத்து பிராய்லா் கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கடையில் பணிபுரியும் ஊழியா் கோழிகளை பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தபோது, கோழிகளை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு கூண்டுக்குள் இருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் அப்பகுதிக்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கோழிக் கூண்டுக்குள் இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள், வனப்பகுதிக்கு கொண்டுசென்று காப்புக்காட்டில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.