எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:25 am IST

ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூா்ப்பட்டி அய்யப்பன்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (65). தொழிலாளி. இவா் தனது சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் புதுச்சத்திரம் பகுதியில் இருந்து தத்தாதிரிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, வெள்ளாளப்பட்டி பகுதியில் தனியாா் கோழிப்பண்ணை எதிரே சென்றபோது, எதிரே வந்த காா், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தங்கவேல் ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த புதுச்சத்திரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் சேலம் மாவட்டம், கம்மாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்வதுரையை (47) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.