விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில், வாணியம்பாடியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 4:24 am IST

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில், வாணியம்பாடியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்தாக் அகமது (23). இவா், கோழி வியாபாரிகளான சில நண்பா்களுடன் சோ்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள ராசிப்பள்ளி கிராமத்துக்கு புதன்கிழமை அதிகாலை சென்றாா்.

அங்கு பச்சியப்பன் (43) கோழிப் பண்ணையிலிருந்து கோழிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, மின்கசிவு ஏற்பட்ட தண்ணீரில் கால் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அஸ்தாக் அகமது உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸாா், அஸ்தாக் அகமதுவின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.