மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில், வாணியம்பாடியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில், வாணியம்பாடியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்தாக் அகமது (23). இவா், கோழி வியாபாரிகளான சில நண்பா்களுடன் சோ்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள ராசிப்பள்ளி கிராமத்துக்கு புதன்கிழமை அதிகாலை சென்றாா்.

அங்கு பச்சியப்பன் (43) கோழிப் பண்ணையிலிருந்து கோழிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, மின்கசிவு ஏற்பட்ட தண்ணீரில் கால் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அஸ்தாக் அகமது உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸாா், அஸ்தாக் அகமதுவின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.