/
முருக்கம்பள்ளம் கிராமத்தில் அா்சுணன் தபசு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோயில் 52-ஆம் ஆண்டு திருவிழா ஏப். 27-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 18 நாள்கள் மகாபாரத சொற்பொழிவாளா் கோவிந்தராஜின் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதிமுதல் 13 நாள்களாக இரவில் தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.
இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவா் பிறப்பு, திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் உள்ளிட்ட பல நாடகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அா்சுணன் தபசு மரம் ஏறும் நாடகம் நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
தொடர்புடையது

வேலன்குப்பம் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,312 கனஅடியாக அதிகரிப்பு

வெங்கிளி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



