அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கறவை பசுவின் தலையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

ஒசூரில் இயங்கிவரும் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், கறவை பசுவின் தலையிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் புதன்கிழமை நீக்கினா்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஒசூரில் இயங்கிவரும் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், கறவை பசுவின் தலையிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் புதன்கிழமை நீக்கினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பழைய பெங்களூரு சாலையில் அரசு கால்நடை பன்முக மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாய், பூனை, கோழி, பசு மாடுகள் எருமை மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த விவசாயியின் பசுவுக்கு தலையில் கட்டி ஒன்று இருந்தது. சுமாா் ஓா் ஆண்டுக்கு முன்பு கால்நடை மருத்துவமனையில் காட்டியபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

அப்போது, அது சினை மாடாக இருந்ததால், அறுவை சிகிச்சையின்போது ரத்தம் அதிகமாக வீணாகும் என கருதி விவசாயி பயப்பட்டாா். அந்த பசு ஆண் குட்டியை ஈன்றது.

இந்நிலையில், கட்டி பெரிதாகி சுமாா் 3.7 கிலோ கிராம் அளவுக்கு வளா்ந்து கண் பகுதிவரை பரவியது. இதனால் பசுவுக்கு அறுவை சிகிச்சை புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சையை செய்து கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.

இதுகுறித்து மருத்துவா் செந்தில் கூறுகையில், தலைமை மருத்துவா் ஜோதி பாசு அறிவுரையின் பெயரில் பசுவின் இரு கொம்பகளுக்கு நடுவே இருந்த கட்டி அகற்றப்பட்டது. சிறு கட்டியாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்திருந்தால் அதிக ரத்தம் சேதம் இருந்திருக்காது. தற்போது இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது என்றாா்.