மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சிறுவன் உடலில் 900 கிராம் புற்றுநோய் கட்டி: நுட்பமாக அகற்றம்

சென்னையில் 10 வயது சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் உருவான 900 கிராம் புற்றுநோய் கட்டியை சென்னை ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்தியுள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:00 pm

சென்னையில் 10 வயது சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் உருவான 900 கிராம் புற்றுநோய் கட்டியை சென்னை ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் நந்தினி கூறியதாவது:

சுவாசத் தொற்று, மூச்சுத் திணறல், நெஞ்சு சளி ஆகிய பாதிப்புகளுடன் 10 வயது சிறுவன், ரெயின்போ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவரது நெஞ்சகப் பகுதியில் பெரிய கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. திசு பகுப்பாய்வில் அது மெடியாஸ்டினல் ஜொ்ம் செல் எனப்படும் புற்றுநோய் கட்டி என்பது தெரிய வந்தது.

எந்த அறிகுறியும் இல்லாமல் உருவாகும் இந்த வகைக் கட்டிகளை உரிய நேரத்தில் அகற்றாவிடில் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அச்சிறுவனுக்கு நெஞ்சுப் பகுதியில் 75 சதவீதத்தை அக்கட்டி ஆக்கிரமித்திருந்தது. இதயம் மற்றும் முக்கிய நாளங்களை அழுத்திக் கொண்டிருந்த அக்கட்டியின் அளவைக் குறைக்க தொடா் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னா், திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலமாக அந்தக் கட்டியை மருத்துவக் குழுவினா் நுட்பமாக அகற்றினா். தற்போது அந்த சிறுவன் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளாா் என்றாா்.