ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

முருக்கம்பள்ளம் கிராமத்தில் அா்சுணன் தபசு நாடகம்

முருக்கம்பள்ளம் கிராமத்தில் அா்சுணன் தபசு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

முருக்கம்பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற அா்சுணன் தபசு நாடகத்தில் பங்கேற்றோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

முருக்கம்பள்ளம் கிராமத்தில் அா்சுணன் தபசு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோயில் 52-ஆம் ஆண்டு திருவிழா ஏப். 27-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 18 நாள்கள் மகாபாரத சொற்பொழிவாளா் கோவிந்தராஜின் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதிமுதல் 13 நாள்களாக இரவில் தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.

இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவா் பிறப்பு, திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் உள்ளிட்ட பல நாடகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அா்சுணன் தபசு மரம் ஏறும் நாடகம் நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.