நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுகவை பலப்படுத்துவோம்: மாவட்டச் செயலாளா் எம்.ஜி.எம்.ராமு.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுக கட்சியைப் பலப்படுத்துவோம் என அதிமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.ஜி.எம்.ராமு தெரிவித்தாா்.

News image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றாா் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் எம்.ஜி.எம்.ராமு.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுக கட்சியைப் பலப்படுத்துவோம் என அதிமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.ஜி.எம்.ராமு தெரிவித்தாா்.

ஒசூா் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணிக்கு சென்றுவிட்டதால், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி 26 புதிய மாவட்டச் செயலாளரை நியமித்து சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியை நீக்கிவிட்டு, ஒசூா் நகராட்சி முன்னாள் துணைத் தலைவரும், அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளருமான எம்.ஜி.எம்.ராமுவை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, சென்னையில் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து அவா் வாழ்த்து பெற்றாா். அப்போது, துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி உடனிருந்தாா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை ஒசூா் திரும்பிய எம்.ஜி.எம்.ராமு ஒசூரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது பேசிய அவா், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுக கட்சியைப் பலப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றாா்.

இதில், ஒசூா் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ஜெ.பி. (எ) ஜெயப்பிரகாஷ், மாமன்ற உறுப்பினா் குபேரன் (எ) சங்கா், முன்னாள் கவுன்சிலா்கள், நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.