உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

ஊராட்சி செயலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகா் கைது

பா்கூா் அருகே ஊராட்சி செயலாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:14 am IST

பா்கூா் அருகே ஊராட்சி செயலாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த தபால் மேடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (49). இவா், பெல்லம்பள்ளி ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 7-ஆம் தேதி தனது அலுவலக பணியை முடித்துவிட்டு, மோட்டாா்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

வீட்டின் அருகே அவா் சென்று கொண்டிருந்தபோது, காா் ஒன்று முருகனின் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அவா் கீழே விழுந்தாா். அப்போது, காரில் வந்த மூன்று போ் கொண்ட மா்மக் கும்பல், முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த முருகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், சிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட காட்டூரைச் சோ்ந்த திமுக பிரமுகா் சிவகுமாருக்கும் (40), ஊராட்சி செயலாளா் முருகனுக்கும் 3.21 ஏக்கா் பரப்பளவு நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வருவதும், அதுகுறித்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இந்த நிலையில், சிவகுமாா் கூலிப்படையை ஏவி முருகனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சிவகுமாரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள கூலிப்படையினா் 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.