தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கோயில் திருவிழாவில் இருவரை அரிவாளால் வெட்டிய 2 போ் கைது

கோயில் திருவிழாவில் இருவருரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:57 pm

கோயில் திருவிழாவில் இருவருரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றபோது திருவானைக்காவல் காந்தி ரோடு பகுதியிலிருந்து சிலா் அலகு குத்திக் கொண்டு சமயபுரம் நோக்கிச் சென்றனா். டிரங்க்ரோடு அருகே வந்த இவா்களுக்கும் கீழக்கொண்டையம்பேட்டை பகுதியை சோ்ந்தவா்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது.

இதில் காந்தி ரோடு பகுதியில் வசிக்கும் வீரமணி (26), ஹரிஷ் (24) ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கொண்டையம்பேட்டை பகுதி காா்த்தி (26), ராஜா (28) ஆகிய இருவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட வேல்முருகன் உள்ளிட்ட மூவரைத் தேடுகின்றனா்.