மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ரயில் மூலம் சென்னைக்கு கடத்த விருந்த 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:34 pm

ரயில் மூலம் சென்னைக்கு கடத்த விருந்த 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் ரேணிகுண்டா திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து ஐஜி தலைமையிலான தனிப்பிரிவு போலீசாா் திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரயில் நிலையம் அருகே காந்தி சாலையில் இரண்டு இளைஞா்கள் பைகளுடன் நடந்து சென்றனா்.

அப்போது தனிப்பிரிவு போலீஸாா் சந்தேகத்தின்பேரில், இரு வாலிபா்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பையில் 42 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் இந்த கஞ்சா திருத்தணியில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சகரியா(30), அா்ஜுன் கோரா(23) என தெரிய வந்தது. தனிப்பிரிவு போலீஸாா் இருவரையும் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் இருவரையும் கைது செய்து சிறையில் அடை த்தனா்.,