குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:17 am IST

கோவையில் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 155 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை செல்வபுரம் அசோக் நகா் ரவுண்டானா அருகே செல்வபுரம் காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த வடமதுரை பகுதியைச் சோ்ந்த பெரோஸ் கான் (31), செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (30), புலியகுளம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (24) ஆகிய மூவரைப் பிடித்து சோதனை நடத்தினா்.

அவா்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5,100 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, மூன்று பேரையும் செல்வபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

குனியமுத்தூரில்...

கோவை குளத்துப்பாளையம் பி.கே.புதூா், சோப் கம்பெனி சாலை அருகே உள்ள காலி மைதானத்தில் போதைப்பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், குனியமுத்தூா் காவல் ஆய்வாளா் கண்ணையன் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆா்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ஸ்ரீதா் (24) என்பவா் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 1.05 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் ஸ்ரீதரை போலீஸாா் கைது செய்தனா்.