பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னைக்கு வருகைதந்த காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, செய்தியாளர்களுடன் பேசுகையில், "அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, அவர்கள் (அதிமுக) எப்படி பிரதமர் மோடியுடன் கைகோக்க முடியும்?
அவர் ஒரு பயங்கரவாதி. அவர் சமத்துவம் மற்றும் நீதியை நம்புவதில்லை. அவரது கட்சியும் சமத்துவத்தை நம்புவதில்லை. அவர்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார்கள்.
அவர்கள் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற திராவிட தலைவர்களின் கொள்கையை பலவீனப்படுத்துகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியை பயங்கரவாதி என கார்கே பேசியது, பாஜக தலைவர்களிடையே பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து, தனது கருத்து சர்ச்சையாகிய நிலையில், "மோடி எப்போதும் மிரட்டுகிறார் என்பதையே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை அவரின் கைகளில் உள்ளன.
அவற்றை வைத்துக்கொண்டு, மக்களையும் அரசியல் கட்சிகளையும் அவர் அச்சுறுத்துவதாகக் கூறினேன்.
ஆனால், நான் கூறியவற்றை பாஜக திரித்து, பரப்பி வருகிறது" என்று கார்கே விளக்கமும் அளித்தார்.
இந்த நிலையில், பிரதமரை பயங்கரவாதி எனக் கூறியதற்கு 24 மணிநேரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.
Summary
EC issues notice to Congress Chief Mallikarjun Kharge over terrorist remark, seeks reply within 24 hours
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோடி - ஷா ஆட்சியால் ஜனநாயகத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்: காங்கிரஸ்

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் மல்லிகார்ஜுன கார்கே!

ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!

கர்நாடகத்தில் கார்கே உள்பட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke




