சென்னை அடுத்த தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தலையொட்டி மக்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
தமிழக சட்டப்பேரவைக்கு நாளை (ஏப். 23) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்குத் தேவையான பணிகள் தேர்தல் ஆணையம் சார்பில் முழு வீச்சில் நடைபெற்றுள்ளன.
வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டு, முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மக்கள் வாக்களிக்க வசதியாக சொந்த ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மாதவரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் புறநகர்ப்பேருந்து நிலையம் என 4 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் புறநகர்ப் பகுதியான தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், சென்னை தாம்பரம் - கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திருப்போருர் - செங்கல்பட்டு வெளிவட்ட சாலையை பயன்படுத்த போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary
Traffic Congestion in Tambaram Advice to Use Alternate Routes
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திண்டுக்கல் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

கிரிவலம், தொடா் விடுமுறையால் அலைமோதிய கூட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி, வேலூா் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!







