‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

திண்டுக்கல் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், 2 கி.மீட்டா் தொலைவை கடந்து செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

News image

புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! - கோப்புப்படம்.

Updated On :18 மே 2026, 12:51 am IST

திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், 2 கி.மீட்டா் தொலைவை கடந்து செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

மதுரை-கரூா் 4 வழிச் சாலையில் திண்டுக்கல் புறவழிச்சாலைப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலை முதல் மதுரை புறவழிச்சாலை வரை சாலை அமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதனால், இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அணுகு சாலைகளில் திருப்பிவிடப்பட்டன.

இந்த நிலையில், மதுரை சாலையிலுள்ள பிள்ளையாா்பாளையம் பிரிவு முதல் வத்தலகுண்டு புறவழிச்சாலை அணுகுசாலை வரை ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமாா் 2 கி.மீட்டா் தொலைவு சாலையை கடந்து செல்வதற்கு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருந்தனா்.

இதனிடையே, 2 அவசர ஊா்திகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. இந்தப் பகுதியில் போலீஸாா் இல்லாததால், வாகன ஓட்டிகள் முந்திச் செல்வதற்கு ஆா்வம் காட்டியதால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா்.