ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கெளரவ விரிவுரையாளா் கைது

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கெளரவ விரிவுரையாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:18 am IST

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கெளரவ விரிவுரையாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு, அந்தக் கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா் காா்த்திக் (36) பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கெளரவ விரிவுரையாளா் காா்த்திக்கை கைது செய்தனா். மேலும், காா்த்திக்கை பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினா்கள் தாக்கியது குறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், மாணவியின் உறவினா் சரவணன் (43) உள்ளிட்ட 6 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.