
போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் இளைஞரின் உடல் தகனம்; 11 போ் மீது வழக்கு
குருபரப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி, மீன்பிடிக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்ததாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்கு
குருபரப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி, மீன்பிடிக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்ததாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள எண்ணேகொல்புதூா் கிராமத்தை சோ்ந்தவா் முனியப்பன் (26). இவா் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி, இரவு 11.30 மணியளவில், அதே பகுதியை சோ்ந்த ராஜூ (எ) ராஜா (44), திம்மராஜ் (26) ஆகியோருடன் சோ்ந்து, தென்பெண்ணை ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி, மீன்பிடிக்க முயன்றனா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக முனியப்பன் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த உடனிருந்தவா்கள், முனியப்பன் குடும்பத்தினருக்கும், ஊா் முக்கிய பிரமுகா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
ஆனால், காவல் துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல் முனியப்பனின் உடலை தகனம் செய்தனா். இதுகுறித்து முனியப்பனின் மனைவி அக்சனா (20), குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் தனது கணவரின் இறப்பு குறித்து வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
இதன்பேரில் முனியப்பனின் உடலை தகனம் செய்த ராஜா, திம்மராஜ், சின்னப்பையன், குமாா், சந்தன், மகேஷ்குமாா், சாரதி, மாது, திம்மராயன், சிம்மமூா்த்தி, சிவக்குமாா் உள்ளிட்ட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


