கொந்தளம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு

பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே கொந்தளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸார் ஆய்வு நடத்தினர்.

பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே கொந்தளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸார் ஆய்வு நடத்தினர்.

நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு கொந்தளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்தளார்.

இதன்படி, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் பூபதிராஜா தலைமையிலான போலீஸார் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஊராட்சி மன்றம் சார்பில், செய்யப்பட்ட பணிகள், அதற்கான வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். புகாரின் பேரில் ஆய்வு செய்ததாக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com