நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கும்

Updated On :23 ஜூலை 2018, 9:39 am IST

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் மரண தண்டனை வழங்கக்கோரி பரமத்தி வேலூர் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.  பரமத்தி வேலூர் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12  வயதே ஆன மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு விசாரணையின்றி மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும்,  மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகள்,  பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அரசும், போலீசாரும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இதில் இச் சங்கத்தின் பொருளாளர் கதிர்வேல்,  மனவளர்ச்சி குன்றியோர் பெற்றோர்கள் அமைப்பின் தலைவி சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.