தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

குமாரபாளையத்தில் ஆதரவற்றுத் திரிந்த யாசகர்கள் 16 பேர் மீட்பு

குமாரபாளையம் நகரத் தெருக்களில் ஆதரிப்போர் இல்லாமல் சுற்றித் திரிந்த யாசகர்கள் 16 பேர் மீட்கப்பட்டு

Updated On :24 செப்டம்பர் 2018, 8:29 am IST

குமாரபாளையம் நகரத் தெருக்களில் ஆதரிப்போர் இல்லாமல் சுற்றித் திரிந்த யாசகர்கள் 16 பேர் மீட்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள காப்பகத்துக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.
குமாரபாளையம் நகரப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில், தெருக்களில் யாககர்கள் சுற்றித் திரிந்தனர். நோயால் பாதிக்கப்பட்டும்,  சுகாதாரமின்றியும், உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உணவுக்கு கையேந்தியபடியும், பேருந்து நிலைய வளாகத்திலும் தங்கியிருந்தனர்.
இவர்களை, அட்சயம் அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனம், கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து காப்பகங்களுக்கு அனுப்பி பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நம்ம குமாரபாளையம் அமைப்புடன் இணைந்து குமாரபாளையத்தில் அட்சயம் அமைப்பு தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களைக் கண்டறியும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில்  உணவு, தங்குமிடம் இல்லாமல் வாழ்ந்துவந்த ஆதரவற்ற முதியோர்கள் 16 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் பலர் வயது முதிர்ந்தும், உறவினர்கள், குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்க்கை நடத்துவது தெரியவந்தது.
அவர்களை மீட்டதோடு,  முதியோர்களுக்கு முகச் சவரம் செய்து குளிக்கச் செய்து, சுத்தப்படுத்தினர். மேலும், சுத்தமான ஆடைகளை  அணிவித்தனர். தொடர்ந்து, இவர்களை விழுப்புரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் நவீன்குமார் தலைமை வகித்தார். நம்ம குமாரபாளையம்  அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஓம் சரவணா முன்னிலை வகித்தனர். 
குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.சேகர், திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன், அதிமுக நகரச் செயலர்  ஏ.கே.நாகராஜன், மகாத்மா காந்தி சமூக சேவை அமைப்புத் தலைவர் என். நாச்சிமுத்து, மக்கள் நீதி மய்யம்  கட்சி நகரப் பொறுப்பாளர் அறிவாளி சரவணன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மொத்தம் 2 பெண்கள் உள்பட  16 ஆண்கள் மீட்கப்பட்டனர். இவர்களில், அந்தியூரைச் சேர்ந்த மதுப்பழக்கத்துக்கு அடிமையான சுமார் 51  வயது பெண்ணையும், பெருந்துறையைச் சேர்ந்த 60 வயது முதியவரையும் அவரது  உறவினர்கள் வந்து தாங்களே  பராமரித்துக் கொள்வதாகக் கூறினர். இறுதியில், ஒரு பெண் உள்பட 14 பேர் காப்பகத்துக்கு வாகனம் மூலம்  அழைத்துச் செல்லப்பட்டு
சேர்க்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.