பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,000 வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குரைஞர்களுக்கு ஓய்வூதியம், 65 வயதுக்குள் இறந்தால் வழக்குரைஞருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, இளம் வழக்குரைஞர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் மாத உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பார்கவுன்சில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் அனைத்து வழக்குரைஞர்களும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் ராசிபுரத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 1,000 வழக்குரைஞர்கள் பங்கேற்றதாக வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். போராட்டத்தால் நீதிமன்றங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.
இதையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்தை சந்தித்தும் வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிப் பாடம் கட்டாயம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! மூளையாக செயல்பட்ட தாவரவியல் பேராசிரியை கைது

கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
பேல்பூரி 17-05-2026
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
