நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

நாமகிரிப்பேட்டை  குப்பை கிடங்கில் தீ

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் குப்பைக் கிடங்கில்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:28 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை பலமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில்18 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும்  குப்பைகளை பேரூராட்சிக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் குப்பைக் கிடங்கில் கொட்டிவருகின்றனர்.  மக்கும் குப்பை மற்றும் மக்காத  குப்பைகளையும் இங்கு கொட்டிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தக் குப்பைக் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. சுற்றுப்புறப் பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டதால், அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து  வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க சுமார் 3 மணி நேரம் போராடினர். பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.