அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும்

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களில் அதிக வாக்குகளைப் பெற்றிட பாடுபட வேண்டும் என மாவட்ட திமுக பொறுப்பாளர் செ.காந்திசெல்வன்
Updated on
1 min read


அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களில் அதிக வாக்குகளைப் பெற்றிட பாடுபட வேண்டும் என மாவட்ட திமுக பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட  திமுக செயற்குழுக் கூட்டம்  மாவட்ட கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் இரா.உடையவர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் பங்கேற்று கூட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கமாகப் பேசினார். அப்போது, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தலில், கிழக்கு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றிட உழைக்க வேண்டும். திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பொன்னுசாமி, மாநில நிர்வாகி ப.இராணி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.விமலா சிவக்குமார், பொருளாளர் கே.செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் ஏ.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுப்பிரமணியம், க.அழகரசு, எஸ்.வனிதா செங்கோட்டையன், நகரப் பொறுப்பாளர் ராணா.ஆர்.ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம்.துரைசாமி, கே.பி.ஜெகநாதன்,  அ.அசோக்குமார், வி.கே.பழனிவேல், துரை இராமசாமி, பெ.நவலடி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com