பரமத்தி வேலூர் அஹ்ரகாரத்தில் உள்ள லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த 8ஆம் தேதி முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுவந்தன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.