நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் புத்தாண்டு பிறப்பின் முதல் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 04th January 2019 08:51 AM | Last Updated : 04th January 2019 08:51 AM | அ+அ அ- |

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் புத்தாண்டு பிறப்பின் முதல் பிரதோஷ வழிபாடு சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு திருவேலீஸ்வரர் மற்றும் நந்திகேஷ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.
இதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், வடகரையாத்தூர் லிங்கேஸ்வரர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...