நாமக்கல் கோட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாசி மகா சிவராத்திரியையொட்டி, நாமக்கல் கோட்டை தாந்தோணித்தெருவில் உள்ள ஸ்ரீபெரியாண்டவர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழா, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
இதையொட்டி, சக்தி அழைத்தல், கன்னிமார் பூஜை, பெரியாண்டவர், அம்மன் பூஜைக்குப் புறப்பாடு, நள்ளிரவில் முப்பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமையன்று, முனியப்பன், மதுரை வீரனுக்கு பூஜை நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை கருப்பனார் சுவாமிக்கு பூஜை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.