"மணல் குவாரியில் 15 நாளுக்கு ஒருமுறை இணையவழி முன்பதிவு'

அரசு மணல் குவாரிகளில், இணையவழி முன்பதிவு சேவை, 15 நாள்களுக்கு ஒருமுறை நடைபெறுவதாக, தமிழ்நாடு மணல்
Updated on
1 min read

அரசு மணல் குவாரிகளில், இணையவழி முன்பதிவு சேவை, 15 நாள்களுக்கு ஒருமுறை நடைபெறுவதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில், அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: அரசு மணல் குவாரிகளில் லாரிகளுக்கு மணல் வழங்கும் இணையவழி முன்பதிவு, மக்களவைத் தேர்தலையொட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 
இணையவழி மூலம் மணல் முன்பதிவு செய்வது 15 நாள்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். மணல் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கூடுதல் மணல் குவாரிகளை திறந்து கட்டுமானப் பணிக்கு தேவையான அளவிற்கு மணலை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு லோடு என்ற அடிப்படையில் மணல் விநியோகம் இருக்க வேண்டும் என்பதே அனைத்து மணல் லாரி உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com