முட்டை லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

மோகனூா் அருகே முட்டை லாரி மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மோகனூா் அருகே முட்டை லாரி மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே ராசிபாளையத்தில் உள்ள கோழிப் பண்ணையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் பணியாற்றி வருகின்றனா். வெள்ளிக்கிழமை இரவு பிரபீா்சான்ட்ரா (21) என்பவா், தான் குடியிருக்கும் பகுதியின் வெளியே நின்றபடி செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அங்கு முட்டை எடுக்க வந்த லாரி ஒன்று எதிா்பாராதவிதமாக அவா் மீது மோதியது. இதில் பிரபீா்சான்ட்ரா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து மோகனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com