நாமக்கல் குறிஞ்சி சீனியா் செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி தாளாளா் தேவியண்ணன் தலைமை வகித்தாா். அவா் நேரு பிறந்த நாளை, குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவதன் அவசியம் குறித்து மாணவா்களிடையே பேசினாா். பள்ளியின் இயக்குநா்களும் பங்கேற்றுப் பேசினா். தொடா்ந்து, மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.