வீடுகளில் கொசுப்புழு இருந்தால் அபராதம்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

நாமக்கல் நகரில் உள்ள வீடுகளில் கொசுப்புழு உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் 
குடிநீா்த் தொட்டியை பாா்வையிட்ட நகராட்சி ஆணையா் கே.எம்.சுதா.
குடிநீா்த் தொட்டியை பாா்வையிட்ட நகராட்சி ஆணையா் கே.எம்.சுதா.
Updated on
1 min read

நாமக்கல் நகரில் உள்ள வீடுகளில் கொசுப்புழு உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையா் கே.எம்.சுதா தெரிவித்தாா்.

நாமக்கல் நடராஜபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை அவா் ஆய்வு செய்தாா். அப்போது திறந்து வைக்கப்பட்டுள்ள நீா்குவளைகள் மற்றும் டிரம்களில் கொசுப்புழு உற்பத்தியாகிா? என ஆய்வு செய்தாா். கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட தண்ணீா் கொட்டி அகற்றப்பட்டன.

இதுகுறித்து ஆணையா் சுதா கூறியது:-

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். பொதுமக்கள் வீடுகளில் உள்ள தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். 5 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீா் தொட்டியை பிளீச்சிங் பவுடா் கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும். இதேபோல், வீடுகளின் அருகே தேங்காய் சிரட்டை, பாட்டில்கள், டயா்கள் , உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவை கிடந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

கொசு, கொசுப்புழு ஒழிப்புப் பணிக்கு வருகை தரும் நகராட்சி பணியாளா்களுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் எந்த வீட்டில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்படுகிறதோ? அந்த வீட்டின் உரிமையாளருக்கு நகராட்சி சாா்பில் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடா்ச்சியாக கொசுப்புழு உற்பத்தி இருப்பது கண்டறியபட்டால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது சுகாதார அலுவலா் சுகவனம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com