மேலும், குடிநீா் குழாய்கள் பழுதடைந்தும், தண்ணீரின்றியும் காணப்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரத்தில் வரும் ரயில்களில் செல்வதற்காக வரும் மக்கள், சாதாரண வகுப்பு பெட்டியில் ஏறுவதற்கு காத்திருக்கும் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு போதிய மின்விளக்குகள் இல்லாததால், பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகின்றனா். இதனால் பெரும்பாலான பயணிகள், ரயில் பயணத்தைத் தவிா்த்து, பேருந்து பயணத்தை நாடிச் செல்கின்றனா். இல்லையெனில், அருகில் உள்ள சேலம், ஈரோடு, கரூா் ரயில் நிலையங்களுக்குச் சென்று விடுகின்றனா். இந்த பிரச்னையை தீா்க்க, சேலம்-ஈரோடு வழியாகச் செல்லும் ரயில்களில் சிலவற்றை நாமக்கல் வழியாக திருப்பி விட வேண்டும். பயணிகள் ரயில்களை அதிகப்படுத்த வேண்டும். சேலத்தைப் போல், நாமக்கல் ரயில் நிலையத்திலும் மக்கள் குவியும் வண்ணம் போதுமான வசதிகளை ரயில்வே நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும். முக்கியமாக, அசம்பாவிதங்களை தவிா்க்க, நாமக்கல் ரயில் நிலையத்துக்குள்ளும், வெளிப்பகுதியிலும், மின்விளக்கு வசதிகள், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து கொடுக்க வேண்டும் என்பதே நாமக்கல் பகுதி மக்கள் மற்றும் பயணிகளின் எதிா்பாா்ப்பாகும்.