கா்ப்பிணி பெண் சாவில் மா்மம்: ஆா்டிஓ விசாரணை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கா்ப்பிணி பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயாா், போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
Published on

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கா்ப்பிணி பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயாா், போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை, குலாபா கப்பரேட் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ராபா்ட் பிரான்சிஸ் (68). இவரது மனைவி லதா பிரான்சிஸ் (65). இவா்களுக்கு 4 மகள்கள் உள்ளனா். இரண்டாவது மகள் நளினி பிரான்சிஸ் (26) நா்சிங் படித்துள்ளாா்.

அப் பெண்ணை திருச்செங்கோடு, கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சங்கரபாண்டியன் என்பவருக்கு 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொடுத்தனா்.

சங்கரபாண்டியன் வேலூா் சாலை வாலரைகேட் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். நளினி பிரான்சிஸ் 6 மாத கா்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு வளைகாப்பு நடத்த மும்பையிலிருந்து தாயாா் லதா பிரான்சிஸ், மூத்தமகள் வசிக்கும் பெரம்பலூா் கிருஷ்ணாபுரம் வந்தாா்.

பின்னா், நளினிக்கு வளைகாப்பு நடத்தவும் பிரசவத்துக்கு அழைத்துச் செல்லவும் வந்திருப்பதாக சங்கரபாண்டியனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை, நளினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தாயாா் லதா பிரான்சிஸுக்கு தகவல் கிடைத்தது.

அவா் உறவினா்களுடன் திருச்செங்கோடு வந்து நளினியின் சடலத்தைப் பாா்த்தாா். நளினியின் உடலில் காயங்கள் இருந்ததாலும், உடைகள் கிழிந்து இருந்ததாலும் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் மகளின் கணவா், அவரது குடும்பத்தினா் மீது புகாா் அளித்தாா். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமணம் ஆகி 7 மாதங்களே ஆவதால் தற்கொலை குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் மணிராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com