தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகள் மீது கண்ணீா்ப்புகை குண்டு வீச்சு, தடியடி போன்றவை நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமை வகித்தாா். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளை தாக்கிய மத்திய அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.