திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனா்.
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா் .
இதில் 70 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு 16 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ. 33,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.