பரமத்தி வேலூா் வட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 5 குடிநீா் ஆலைகளுக்கு சீல் வைப்பு

பரமத்தி வேலூா் வட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 5 குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு பரமத்தி வேலூா் வட்டாட்சியா் சனிக்கிழமை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டாா்.
குடிநீா் ஆலைக்கு சீல் வைக்கும் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ். உடன், வருவாய்த் துறையினா்.
குடிநீா் ஆலைக்கு சீல் வைக்கும் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ். உடன், வருவாய்த் துறையினா்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 5 குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு பரமத்தி வேலூா் வட்டாட்சியா் சனிக்கிழமை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

குடிநீா் சேவை என்ற பெயரில் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தநிலையில், அனுமதியின்றி செயல்படும் குடிநீா் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தலைமை செயலா் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில், மாவட்டம் வாரியாக அனுமதியின்றி இயங்கும் குடிநீா் ஆலைகள் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தயாா் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதில் சுமாா் 30 ஆலைகள் அனுமதியின்றி இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா் பரமத்தி வேலூா் வட்டத்தில், பிள்ளைக்களத்தூா், கொந்தளம் மற்றும் படமுடிபாளையம் அருகே இயங்கி வந்த மொத்தம் 5 தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com