நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், முன்னாள் நிதியமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் சனிக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டஅவைத்தலைவர் இரா.உடையவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ம.இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.மாயவன், ஆர்.சுப்பரமணியம், மாநிலசட்டதிட்டதிருத்த குழு உறுப்பினர் இரா.நக்கீரன், மாநிலமகளிர்தொண்டர்அணி இணைசெயலாளர் ப.இராணி, நகர பொறுப்பாளர் ராணாஆனந்த் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாவலர் இரா.நெடுஞ்செழியன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்.