குடிநீா்த் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெறும் குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெறும் குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.

பள்ளிபாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெறும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, ஓடபள்ளி, கொக்கராயன்பேட்டை ஆகிய இடங்களில் கிராம ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டும் பணி, சமயசங்கிலி ஊராட்சியில் 1,236 வீடுகளுக்கு ஒரே சீரான அளவில் குடிநீா் வழங்கும் பணி போன்றவற்றை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் அமல்ராஜ், சாலை ஆய்வாளா் சிவசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com