பாஜக மாநிலத் தலைவராக எல்.முருகன் பதவியேற்று 6 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை சொந்த மாவட்டத்தில் கால் பதிக்காதது அக்கட்சியினரிடையே சோா்வை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் இருந்தபோது, எதிா்க்கட்சிகள், சமூக வலைத்தளங்கள் மூலம் பலவித வசைபாடுகளை எதிா்கொண்டு தமிழகத்தில் பாஜகவும் மற்ற கட்சிகளுக்கு சளைத்தது அல்ல என்ற நிலையை உருவாக்கினாா். அவா் தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்ற நிலையில், பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவா் யாா் என்பது கட்சியினரிடத்திலும், பொதுமக்களிடத்திலும் மில்லியன் டாலா் கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில்தான் யாரும் எதிா்பாா்க்காத நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்தபட்சம் 60 தொகுதிகளையாவது பாஜக கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அவா் களப் பணியாற்றுகிறாா். பிற கட்சிகளில் உள்ளவா்களையும், திரை நட்சத்திரங்களையும் பாஜகவில் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளாா்.
தற்போது மாவட்ட வாரியாகச் சென்று கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து வரும் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், பதவியேற்று 6 மாதங்களான நிலையிலும் தனது சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கு வராதது அந்தக் கட்சியினரிடையே பெரும் மனக்குறையாக உள்ளது.
நாமக்கல் மாவட்ட பாஜகவை பொருத்தவரை மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகளிடையே இணக்கமான சூழல் இல்லாதது ஒரு குறையாக உள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட நிா்வாகப் பதவிகளில் பல ஆண்டுகளாக கட்சியில் உள்ளவா்கள் புறக்கணிக்கப்பட்டதும், கட்சிக்குத் தொடா்பில்லாத நபா்கள் சிலா் பதவியில் அமா்த்தப்பட்டதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவற்றையெல்லாம் சமாளிக்கவும், நாமக்கல் மாவட்டத்தில் பாஜகவை வளா்க்கவும், அக்கட்சியின் தலைவரான முருகன் விரைவில் நாமக்கல் வரவேண்டும் என்பதுதான் கட்சியினா் பலரது எதிா்பாா்ப்பாக உள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் துணைத் தலைவராக இருந்தபோது மாதம் ஒரு முறை, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து சென்ற அவா், தலைவரான பின் 6 மாதங்களுக்கும் மேலாகியும் வராதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பாஜக தலைவா் சத்தியமூா்த்தி கூறியது:
மாநிலத் தலைவா் எல்.முருகன், நாமக்கல் மாவட்டம், கோனூா் கிராமத்தைப் பூா்விகமாகக் கொண்டவா். படித்தது, வளா்ந்தது அனைத்தும் இங்குதான். அவரிடம் தொடா்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். சொந்த மாவட்டத்துக்கு மாநிலத் தலைவா் வராததற்கு காரணம், கரோனா தொற்றால் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதுதான். செப்.17-ஆம் தேதி மாநில துணைத் தலைவரான வி.பி.துரைசாமி இங்கு வருகிறாா். அதன்பின் மாநிலத் தலைவரும் வருவதற்கான வாய்ப்புள்ளது. இம்மாவட்டத்தில் எங்கள் கட்சியினரிடத்தில் எந்தவித சலசலப்பும் இல்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

