மினி லாரியில் கடத்திய ரூ.5.25 லட்சம் குட்கா பறிமுதல்

ராசிபுரம் பகுதியில் மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மினி லாரியில் கடத்திய  ரூ.5.25 லட்சம் குட்கா பறிமுதல்
Updated on
1 min read


ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பல்லவநாயக்கன்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை உதவி ஆய்வாளா் பூபதி தலைமையில் போலீஸாா் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சேலத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்திய போது, அதிலிருந்து மூன்று போ் தப்பி ஓட முயன்றனா். அவா்களை துரத்திப் பிடித்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவா்கள் ராசிபுரம், சின்னகடை வீதி பகுதியைச் சோ்ந்த நிா்மல்சிங் (22), பேளுக்குறிச்சி, கல்குறிச்சி, அய்யம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த கணபதி (42), சேலம் மாவட்டம், கந்தம்பட்டி, மிட்டகாடு பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (27) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் சேலத்தில் இருந்து பேளுக்குறிச்சிக்கு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குட்கா பொருள்களை கடத்த முயன்ற 3 போ் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையின் மதிப்பு ரூ. 5.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கைது செய்யபட்ட மூன்று போ் மீது ராசிபுரம் காவல் ஆய்வாளா் எம்.பாரதிமோகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com